Tuesday, December 1, 2009



கார்த்திகை விளக்கீடு: மன இருள் மாய்ப்போம்!



அந்தி நேரம். கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். “எனக்குப் பிறகு யார் இந்த உலகிற்கு ஒளிதரப் போகிறீர்கள்?” என்று கவலையுடன் கேட்டான். நிலவு இருந்தது, நட்சத்திரங்கள் இருந்தன, எல்லாம் அமைதியாக இருந்தன. ஒரு சிறு மண் அகல், அதன் சுடர் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. தன் தலையை நிமிர்த்திச் சொன்னது “நான் இருக்கிறேன், சூரிய தேவா!”- ரவீந்திர நாதத் தாகூரின் ஒரு கவிதைஅகல் விளக்குகள் ஏற்றி அதன் ஒளியில் அகிலம் முழுதும் நிறைந்திருக்கும் பேரொளியை உணரும், வழிபடும் நம் தொன்மைத் திருநாள் கார்த்திகை தீபம்.


சங்க காலத்தைச் சேர்ந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான “கார் நாற்பது” என்னும் நூலில் உள்ள ஒரு பாடல் -நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்டதலைநாள் விளக்கின் தகையுடைய ஆகிப்புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழித்தூதொடு வந்த மழை“தோழி, கார்த்திகைத் திருநாளன்று நாடெங்கும் விளக்குகள் பூத்தன போல் காடெங்கும் தோன்றிப் பூக்கள் பூத்தன, மழையும் வந்தது” (தலைவன் வரும் கார்காலமும் வந்தது என்பது குறிப்பு).இதன் மூலம் இந்த தெய்வீகத் திருநாளின் தொன்மையை அறியலாம். சைவமும், வைணவமும் செழித்து வளர்ந்த காலகட்டங்களிலும் இத்திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. நாம் ஏற்றும் தீபங்கள் அக இருள் அகற்றும் தெய்வீக ஞானத்தின் உருவகங்கள் என்பதையும் பல பாடல்கள் உணர்த்தும்.“விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றிவிளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டிவிளக்கில் விளைக்கை விளக்க வல்லார்க்குவிளக்குடையான் கழல் மேவலுமாமே”என்ற திருமந்திரப் பாடலின் ஆழ்ந்த தத்துவப் பொருள் அறிந்து, உணர்ந்து, அனுபவிக்கத் தக்கது. அகல்,எண்ணெய், திரி, சுடர் என்று பலவாறாகத் தோன்றும் விளக்கு என்பது ஒளியில் ஒன்றுபடுவது போல, பலவாறாகத் தோன்றும் பிரபஞ்சமும், ஜீவனும் பரம்பொருளான சிவத்தில் அடங்கும் என்பது இதன் உட்பொருள்.“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாகஇன்புருகு சிந்தை இடுதிரியா, நன்புருகுஞானச் சுடர்விளக்கேற்றினேன், நாரணர்க்குஞானத்தமிழ் புரிந்த நான்”என்று ஆழ்வார் அற்புதமாகத் தனது ஞான விளக்கு பற்றிக் கூறுகிறார்.


தமிழகம் மற்றும் பாரதத்தின் பல பகுதிகள் போலவே, இலங்கை ஈழத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தத் திருநாளைப்பற்றி சகோதரர் அகிலன் சுவையாக எழுதியுள்ளார்.http://agiilankanavu.blogspot.com/2006/12/blog-post.html. இதிலே இப்படி ஒரு கேள்வியையும் கேட்டிருக்கிறார்."இன்றைக்கு விளக்கீடு என்றதும் எனக்கு உடனே ஞாபகம் வந்தது இதுதான். விளக்கீடு என்றால் கார்த்திகை தீபம் ஏற்றுவது. அதான் அதை தமிழ் நாட்டில் எப்படி சொல்வார்கள் என்று தெரியவில்லை ஆனால் ஈழத்தில் இதுதான் அதன்பெயர்."தமிழ்நாட்டிலும் இதன் தொன்மையான பெயர் விளக்கீடுதான், அதனாலேயே இந்தப் பதிவுக்கு அப்படியே தலைப்பிட்டேன். சென்னை திருமயிலைக்கு திருஞானசம்பந்தப்பெருமான் வந்தபோது, என்றோ அரவம் தீண்டி மாண்ட பூம்பாவை என்ற பெண்ணின் சாம்பல் வைத்த குடத்தை முன்வைத்துசிவபெருமானை வணங்கி மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பிய பதிகத்தில் அந்நாளில்தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட பண்டிகைளின் பட்டியல் இருக்கிறது. இதிலே உள்ள அழகிய ஒரு பாடல் –“வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்துளக்கில் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகைநாள்தளத்தேந்திளமுலையார் தையலார் கொண்டாடும்விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்”இப்பாடலில் வளையணிந்த அழகிய பெண்கள் விளக்கேற்றியது குறிப்பிடப் படுகிறது.இந்து தர்மத்தின் சமய ஒருமையைப் பறை சாற்றும் திருநாள் கார்த்திகை.“அறுசமய சாத்திரப் பொருளோனேஅறிவில் அறிவால் உணர் கழலோனேகுறுமுனிவர் ஏத்தும் முத்தமிழோனேகுமரகுரு கார்த்திகைப் பெருமாளே”என்று கார்த்திகைப் பெண்டிர் எடுத்து வளர்த்த கந்தப் பெருமானை அருணகிரியார் பாடி மகிழ்வார். சிவபெருமான் அருட்பெரும்ஜோதியாக தரிசனம் தரும் திருநாள். ஞானப் பேரொளி உமையையும், தீப லட்சுமியையும் திருவிளக்கில் போற்றும் நாள். திருமால் திரிவிக்கிரமனாக அவதரித்து மாவலியைப் பாதாளத்தில் அமிழ்த்திய நாள். பரணி தீபம், திருவண்ணாமலை தீபம், சர்வாலய தீபம் என்று எல்லா ஆலயங்களிலும், பட்டி தொட்டிகள் தோறும் கொண்டாடப் படும் திருநாள் இது. சிறு சிறு குடிசைகள் கூட விளக்குகளால் அலங்கரிக்கப் படும் நாள் இது.


மகாகவி பாரதி எழுதுகிறார்:கார்த்திகையில் கார்த்திகை நாள் கார்மேனிக் கமலக் கண்ணன் கொடியவரைக் கடிந்தடக்கிய நாள். உலகினில் கொடுங்கோலர்கள் கொட்டத்தைக் கருணாநிதியான கடவுள் அடக்கிய நாள்… பாரதர்கள் வெந்துயர்களையும் பரந்தாமன் விரட்டிய நாள். ஆரியர்களின் ஆண்மை அவனியில் பொலிந்திடு நாள். வானவரும் தானவரும் வருத்தம் நீங்கி வாழ்க்கை நிலையின் வனப்பை எய்திய நாள். மறமிடர்ப்படுக்கப் பட்ட மகிமைப் பெருநாள். அறம் தழைத்தோங்க ஆரம்பித்தத ஆனந்தத் திருநாள். தீபச் சோதியால் தேவாலயத்தை நிரப்பிடு நிகரில் திருநாள். வாணவேடிக்கையும், மாவலியாட்டும் மலிந்திடு நாள். பாரத மக்கள் ஸ்ரீ பகவானருள் பெற்ற நாள். கிருபாநிதிக் கடவுள் கருணை பொழிந்திடு நாள். பார் உவந்த உத்தமத் திருநாள் கார்த்திகையில் கார்த்திகை நாளே.(நன்றி: மகாகவி பாரதியின் உரைநடை வரிசை – சிந்தனைகள், பக்கம் 28, மணிமேகலைப் பிரசுரம்)இத்திருநாளில் நாம் ஏற்றும் தீபங்கள் புற இருளை அகற்றுவது போல், ஞானம் என்ற பேரொளி நம் மன இருளை மாய்க்க வேண்டும். “மனத்து இருளேதுமின்றி” என்று அபிராமி அந்தாதியும், “மனத்திருள் மூழ்கி கெடலாமோ” என்று திருப்புகழும் சுட்டுவது இதைத் தான்.உலகில் இருள் என்பது எப்போதும் இருப்பது, அதனாலேயே அதை அழிக்கும் ஒளியின் தியானமும், நினைவும் எப்போதும் தேவைப்படுகிறது. இன்று நாம் காணும் வன்முறைகளுக்கும், கொடூரங்களுக்கும் காரணமாகவும், அழிவு மற்றும் ஆக்கிரமிப்பு சக்திகளின் பின்னணியிலும் இருப்பது இந்த மன இருள் தான். திண்ணை (அக்டோபர் 19,2006) இதழில் இருளும், மருளும், இஸ்லாமும் என்ற கட்டுரையில் திரு. நேசகுமார் இந்தக் கருத்தை மிக அற்புதமாக விளக்குகிறார். அதை அப்படியே கீழே தருகிறேன்.'.. இன்று இஸ்லாத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ளாதபடிக்கு , காண்போரின் மனங்களையும் மயக்குவது இந்த இருட்தன்மைதான் . இந்தியத் தத்துவங்கள் , மரபுகள் இந்த இருள் என்றென்றும் இருக்கும் என்கின்றன . ஒளியும் இருளும் ஒருகாலும் தீராஒளியுளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும்ஒளியுருள் கண்டகண் போலவே றாயுளஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே !- திருமந்திரம் - 1819.


சுழல் போன்று வந்து மீண்டும் மீண்டும் நம்மை ஆக்கிரமித்துக் கொள்வது இந்த இருள். இந்த இருளுக்கும் மருளுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. இஸ்லாத்தின் மிகப்பெரிய பலம் இந்த மருட்சிதான். ஆன்மீக ரீதியான மருட்சியானது இறைவன் பற்றிய மிரட்டல்களிலிருந்து தொடங்கி, நரகம் பற்றிய அச்சுறுத்தல்களால் பின்பற்றுபவர்களின் மனதை மருள வைக்கிறது. இது போதாதென்று, இதைக் கண்டு மருளாதவர்களை மிரட்டவே ஃபிஸிக்கலாக வன்முறையை பிரஸ்தாபிக்கின்றது இஸ்லாம். இந்த மன மருட்சி, மனதின் சிந்தனையை மூடி மறைத்துக் கொள்கிறது. இஸ்லாமிய வரலாற்றை உற்றுக் கவனித்தால், ஆரம்பத்தில் முகமதுவும் இதே மனநிலையில் இருந்தது தெரியவரும். வானத்தை மறைத்துக் கொண்டு ஆயிரம் இறக்கைகளுடன் தோன்றித் தம்மை இறுக்கிப் பிடித்து பேயடித்தவனின் நிலைக்குக் கொண்டுபோன ஜிப்ரீலின் மீது முகமதுவுக்கு பயம் ஏற்பட்டது. தற்கொலைக்குக் கூட முயன்றார் முகம்மது. பிறகு, தம்மை எதிர்த்தவர்கள் வன்முறையை மேற்கொண்டபோது எதிர்த்துத்தாக்கத் தைரியமில்லாமல் பயந்துபோய் ஊரை விட்டு ஓடினார்(விவேகானந்தர் இதுகுறித்து ஓரிடத்தில் எழுதும்போது, இப்படி எதிர்க்க வழியில்லாமல் வன்முறையை ஏற்பவர்கள் வாய்ப்புக் கிடைத்தவுடன் மற்றாவர்கள் மீது அதே வன்முறையை திணிப்பார்கள் என்று தெரிவிக்கின்றார்). இப்படி மருள் இருளாய் மாறி முகமதுவின் மனதைக் கைப்பற்றிக் கொண்டதுபோலவே, அவரது அடியார்களையும் காலம்காலமாய்ப் பற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறது. இந்த இருளுக்கும், இதனிலிருந்து மீள மனித குலம் தம்மிலிருக்கும் உயரியசக்தியை விழிப்புணர்வை துணைக்கழைத்து மேற்கொள்ளும் போரே தேவ-அசுர யுத்தமாக இந்தியப் பெருங்கதைகளில் சித்தரிக்கவும் படுகிறது . மனித மனத்தின் விழிப்புணர்வின் உச்சமானதொரு தன்மையை இறைவன் இறங்கி அசுரர்களை எதிர்கொள்வதாக புராணங்கள், கதைகள், வழக்குகள் சித்தரிக்கின்றன. மாட்டுத் தலயுடன் கொண்ட சிந்திக்கா அசுரனை வீழ்த்தும் சக்தியை ஒரு இந்துவாக நம்மில் பலர் வணங்கியிருப்போம்.சிறுவயதில் நான் அடிக்கடி சிந்தித்ததுண்டு. எப்படி அசுரர்களும் அதே கடவுளை வணங்குகின்றனர் . அசுரர்களுக்கு ஏன் இறைவன் வரங்களை வாரி வழங்குகின்றார் ? அது எப்படி அசுரர்கள் ஏக இறைவனை மட்டுமே வணங்கி உலகங்களையெல்லாம் விடு விடுவென்று ஆக்கிரமித்து விடுகின்றனர் . அது ஏன் கடைசியில் எல்லோரும் இறைஞ்சிய பின்னரே இறைவன் இறங்கி வருகின்றார் - இது போன்ற பல கேள்விகளுக்கு இன்று புலப்படும் விடை, இதெல்லாம் குறியீடுகள் என்பதே. அசுரத்தன்மை என்பது நமது மனத்தின் பின் கதவுகள் தாம். கடவுள் கீழிறங்கி வருவது என்பது கடைசியில் நமக்குள் ஏற்படும் விழிப்புணர்வுதான்!"


அனைவருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment